மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறப்பு கூட்டத் தொழுகை

திருப்பூரில் மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறப்பு கூட்டத் தொழுகையில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-28 11:21 GMT
சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டவர்கள் 

திருப்பூரில் மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறப்பு கூட்டத் தொழுகையில் ஈடுபட்டனர். தமிழக முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. மேலும் மழை இல்லாததான் காரணமாக தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனைப் போக்க வலியுறுத்தியும் கோடை வெயிலின் தாக்கம் குறைவதோடு மழை வேண்டியும் திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர்.

முன்னொரு காலத்தில் இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் மழை இல்லாத நேரத்தில் தொழும் திடலுக்குச் சென்று மழை வேண்டி திசையை முன்னோக்கி தன் மேலாடையை மாற்றி போட்டு புறங்கையை வானத்தை நோக்கி காட்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டதன்,

வழியில் இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

Tags:    

Similar News