தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சாதிய ஆணவ படுகொலைகளை கண்டித்தும், சாதிய ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-02 03:25 GMT

ஆர்ப்பாட்டம் 

மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் அழகேந்திரன், மாற்று சமூக பெண்ணை காதலித்ததால், தலையை துண்டித்து ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ,சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால், நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதை கண்டித்தும் ,சாதி ஆணவ படுகொலைகளுக்கு தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும், தமிழ் புலிகள் கட்சியின் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் சேகுவேரா தலைமை தாங்கினார் . மேற்கு மாவட்ட செயலாளர் வ.கார்த்தி முன்னிலை வகித்தார் . இதில் ஊடகப் பிரிவு மாநில செயலாளர் செந்தமிழன், இளம் புலிகள் அணி மாநிலத் துணைச் செயலாளர் அறிவுத்தமிழன், ஆகியோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். இதில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். நாமக்கல் நகர பொறுப்பாளர் ராஜா நன்றி கூறினார்..

Tags:    

Similar News