அரசு கலைக் கல்லூரியில் தமிழ் மாணவர் மன்ற விழா

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ் மாணவர் மன்ற விழா நடந்தது.

Update: 2023-12-14 15:23 GMT

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ் மாணவர் மன்ற விழா நடந்தது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ் மாணவர் மன்ற விழா நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மற்றும் அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி செய்யாறு இணைந்து நடத்திய மாணவர் மன்ற விழா நேற்று நடந்தது.

பேச்சுப் போட்டியில் அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி மாணவிகள் லோ.ராதிகா முன்றாம் ஆண்டு ஆங்கிலத்துறை முதல் பரிசு ரூபாய் 5000, வே.மோகனப்பிரியா பி.எஸ்சி முதலாம் ஆண்டு இயற்பியல் துறை இரண்டாம் பரிசு ரூபாய் 3000, ப.சஞ்சய் குமார் முன்றாம் ஆண்டு பி.ஏ. தமிழ்த்துறை மாணவன் மூன்றாம் பரிசு ரூபாய் 2000 பரிசுப் பெற்றனர். கல்லூரி முதல்வர் கலைவாணி பரிசு பெற்றவர்களை பாராட்டி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் திரிபுரசுந்தரி, இராஜசேகரன், அருணாசலம், மணி, சீனிவாசன் மற்றும் மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினைப் போட்டி ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்துறைத் தலைவர் கண்ணன் ஏற்பாடு செய்திருந்தார் .

Tags:    

Similar News