டாஸ்மாக் அலுவலக முற்றுகை போராட்ட போஸ்டரால் பரபரப்பு

கோவில் பகுதியில் டாஸ்மாக் திறப்பதற்கு எதிர்ப்பு தாயமங்கலம் ஊராட்சி மக்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள டாஸ்மாக் அலுவலக முற்றுகை போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-12-27 11:19 GMT

போஸ்டர் 

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்களும், பொதுமக்களும் அதிகம் வரக்கூடிய இடமாக உள்ளதால் தாயமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மீண்டும், மீண்டும் மதுபானக்கடையை திறக்க முயற்சிக்கும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து ஜனவரி 1 ஆம் தேதி மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த தாயமங்கலம் ஊராட்சி பொதுமக்கள் முடிவு செய்துள்ளதாக நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News