நாகர்கோவிலில் மீண்டும் விபத்து ஏற்படுத்திய டாரஸ் லாரி

நாகர்கோவிலில் மீண்டும் விபத்து ஏற்படுத்திய டாரஸ் லாரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-04-07 08:50 GMT
விபத்தில் சிக்கிய பைக்

குமரி மாவட்டத்தில் கனிம வளம் ஏற்றி செல்லும் டாரஸ் லாரிகளுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் விபத்துக்கள் குறைந்தபாடில்லை.        இந்த நிலையில் நேற்று நாகர்கோவில் நோக்கி பைக்கில் வாலிபர்  ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவரது பைக்குக்கு பின்னால் கனிம வள காலி டாரஸ் லாரி சென்றுள்ளது. 

பைக் தோட்டியோடு பகுதியில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியுள்ளது.     மோதிய வேகத்தில் பைக் முன்னாள் சென்ற வேனுக்கும், டாரஸ் லாரிக்கும் இடையில் சிக்கி நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பைக்கை ஓட்டிய வாலிபர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.       

வாலிபரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். தகவல் அறிந்து வந்த இரணியல் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News