வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

கன்னியாகுமரி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-31 05:07 GMT
கணவன் கொலை

குமரி மாவட்டம், புதுக்கடை அருகே விழுந்தயம்பலம் பகுதி அருவை என்ற இடத்தை சேர்ந்தவர் சுரேஷ் மகன் மிதுன் (22). ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் வேறு வேலைக்கு முயற்சி செய்தும், அவருக்கு பிடித்த வேலை கிடைக்காத காரணத்தால் விரக்தியில் இருந்துள்ளார். இதனால் மதுப்பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை தின்று ஆபத்தான நிலையில் காணப்பட்டுள்ளார்.

உறவினர்கள் மீட்டு, மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவிக்கு பின், நெய்யாற்றின் கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிட்சைக்கு சேர்த்தனர். பின்னர் 28-ம் தேதி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிட்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார். இது தொடர்பான புகாரின் பேரில், புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News