வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை
திருச்சி மாவட்டம், ஏவூர் கிராமத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-05-02 11:09 GMT
தற்கொலை
திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஏவூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் 29 வயதான ஹானஸ்ட்ராஜ். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் கடுமையான வயிற்று வலியில் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஹானஸ்ட்ராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து முசிறி் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.