ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

சேலத்தில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-06-10 09:20 GMT

பலி

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவருக்கு 25 வயது இருக்கும். இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ெதாடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது ரெயிலில் அடிப்பட்டு இறந்த வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News