கும்மிடிப்பூண்டியில் கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

கும்மிடிப்பூண்டியில் கிணற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-30 15:42 GMT

வாலிபர் பலி

கும்மிடிப்பூண்டி அடுத்த போடிரெட்டிகண்டிகை கிராமத்தில் வசித்தவர் ராஜகோபால் மகன் கிரண், 21. அருகில் உள்ள பாத்தப்பாளையம் கிராமத்தில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் நேற்று மதியம் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது கிணற்றில் மூழ்கி மாயமானார். தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், ஒரு மணி நேர தேடலுக்கு பின் கிரண் உடலை மீட்டனர்.
Tags:    

Similar News