ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
ஊத்தங்கரை அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-02 16:08 GMT
கோப்பு படம்
அசாம் மாநிலம் கோகைக்கான் மாவட்டத்தை சேர்ந்தவர் சுஜாந்த்மோதிலால் (35). இவர் அசாம் மாநிலத்தில் இருந்து புறப்பட்ட ரயிலில் பயணம் செய்தார். அந்த ரயில் நேற்றிரவு 7 மணிக்கு ஊத்தங்கரையை அடுத்த சாமல் பட்டி அருகே வரும்போது,
எதிர்பாராதவிதமாக படிக்கட்டில் பயணம் செய்த சுஜாந்த் மோதிலால் தவறி விழுந்தார். இதில் பலத்த அடிப்பட்ட சுஜாந்த்மோதிலால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சேலம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.