கரூர் அருகே பைக்கில் இருந்து விழுந்து வாலிபர் காயம்

கரூர் அருகே பைக்கில் இருந்து விழுந்து வாலிபர் காயம் அடைந்தார்.;

Update: 2024-01-25 08:55 GMT

காவல் நிலையம் 

கரூர் மாவட்டம் , கடவூர் தாலுக்கா, கிழக்கு அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் மகன் சக்தி முருகன் வயது 19. இவர் ஜனவரி 22 ஆம் தேதி மதியம் 3 மணியளவில் தரகம்பட்டியில் இருந்து வையம்பட்டி செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் பொன்னா கவுண்டனூர் வளைவு அருகே சென்ற போது, டூவீலரை வேகமாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் சக்தி முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சக்தி முருகனின் சகோதரி ராஜேஸ்வரி வயது 31 என்பவர், இது குறித்து பாலவிடுதி காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,

டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமான சக்தி முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பாலவிடுதி காவல்துறையினர்.

Tags:    

Similar News