மாணவியை கடத்திய வாலிபர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே மாணவியை கடத்திச் சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார் .

Update: 2024-05-09 13:27 GMT

கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த இரும்பேடு பகுதியைச் சேர்ந்த விஜய் ரஞ்சித் (வயது 20) பிளஸ்-2 படிக்கும் மாணவியை கடத்தி சென்றதாக ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் விஜய் ரஞ்சித்தை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News