கோவில் கும்பாபிஷேக விழா

மல்லிக்குட்டை திம்மராய சுவாமி கோவிலில் விநாயகர் சன்னதியின் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2024-02-27 09:23 GMT
தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குண்டல்பட்டி அருகே மல்லிக்குட்டை பகுதியில் திம்மராய திருக்கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் சுற்று வட்டார பகுதியில் இருந்து 40 கிராமங்கள் சொந்தமான திம்மராய பெருமாள் அமைந்துள்ளது திருக்கோயில் வளாகத்தில் விநாயகருக்கு என புதிதாக கோவில் கட்டி இன்று மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதற்கு முன்பதாக கொடியேற்றுதல் கங்காணம் கட்டத்தில் பால்குட ஊர்வலம் முதலாம் கால பூஜை இரண்டாம் கால பூஜை கணபதி ஹோமம் பூஜைகள் நடைபெற்று இன்று காலை கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது பக்தர்கள் கலைந்து கொண்டு தரிசனம் பெற்றனர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News