ஊர்க்காவல் படையில் ஆள்சேர்ப்பு தற்காலிகமாக ஒத்திவைப்பு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரையில் நடைபெற இருந்த ஊர்க்காவல் படையில் ஆள்சேர்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2024-03-19 12:04 GMT

ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு 

மதுரை மாநகர் ஊர்க்காவல் படைக்கு நாளை ஆள் சேர்ப்பு நடைபெற இருந்தது.தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் மதுரை மாநகர் ஊர்காவல்படை ஆள்சேர்ப்பு தற்காலிகமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. ஊர்காவல்படை ஆள்சேர்ப்பு தேதி பாராளுமன்ற தேர்தல் நிறைவு பெற்ற பின்பு அறிவிக்கப்படும் என்று மதுரை மாநகள் ஊர்காவல்படை வட்டார தளபதி அறிவிக்கிறார்.
Tags:    

Similar News