டென்சிங் நாா்கே சாகச விருது விண்ணப்பம் - கலெக்டர் அறிக்கை

இந்திய அரசின் சாா்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் டென்சிங் நாா்கே சாகச விருது 2023-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்தார்.

Update: 2024-05-30 05:24 GMT

மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ்

 செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் .அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசின் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் நிலம், கடல் மற்றும் வான் ஆகியவற்றில் சாதனைகள் புரிந்த நபா்களுக்கு டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது வழங்கி கௌரவித்து வருகிறது. தற்போது 2023-ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது வழங்குவதற்கு இந்திய அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்பத்தை இணையதள முகவரியில் விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2024 மாலை 5.00 மணி ஆகும்.

இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டு அரங்கம், செங்கல்பட்டு அலுவலகத்திலோ (அல்லது) என்ற கைப்பேசி எண்: 74017 03461 எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

Tags:    

Similar News