பள்ளிபாளையம் அருகே பயங்கர விபத்து

நாமக்கல் மாவட்டம், ஆலாம்பாளையம் கார் மோதி இளைஞர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-07 13:51 GMT

விபத்து

பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலை ஆலாம்பாளையம் என்ற பகுதி அருகே இன்று மதியம் ஐந்து பனை பகுதியில் பள்ளிபாளையம் நோக்கி கார் ஒன்று,பள்ளிபாளையம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பிரதீப் என்ற இளைஞர் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ,தூக்கி வீசப்பட்ட இளைஞர் பிரதீப் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் பிரதீப்பை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரிக்கின்றனர்.பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் தற்போது மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடிவுற்ற நிலையில், அதிகாரப்பூர்வமாக கனரக வாகனங்கள் உள்ளிட்டவை செல்வதற்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. ஒருவழிப் பாதையாக இருபுறமும் வாகனங்கள் சென்று வரும் நிலையில், குறுகலான சாலையில் வரும் வாகனங்களால் அடிக்கடி இது போல் விபத்து ஏற்பட்டு வருகிறது.

Tags:    

Similar News