சிவகாசி அச்சகத்தில் பயங்கர தீ விபத்து....

சிவகாசி அச்சகத்தில் பயங்கர தீ விபத்து. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Update: 2024-04-26 10:31 GMT

 தீ விபத்து

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சோலை காலனியை சேர்ந்தவர் சாந்தி இவருக்கு சொந்தமான வீட்டின் மாடி பகுதியை ராஜேஷ் என்பவர் வாடகைக்கு எடுத்து எவரெஸ்ட் என்ற பெயரில் ஸ்கிரீன் பிரிண்டிங் நடத்தி வருகிறார். மேலும் பணியை முடித்துவிட்டு இரவு பணியாளர்கள் வீடு திரும்பிய நிலையில் அதிகாலை இயந்திரத்தில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டன.இந்த விபத்து குறித்து உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்ச மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் இச்சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Tags:    

Similar News