தென்காசி அருகே பயங்கர தீ விபத்து

தென்காசி மாவட்டம், கடையம் அருகே வைக்கோல் போரில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.

Update: 2024-06-02 10:16 GMT
தென்காசி அருகே பயங்கர தீ விபத்து
தென்காசி மாவட்டம், கடையம் அருகே மாதாபுரத்தில் இருந்து தோரணமலை செல்லும் சாலையில் கானாவூர் பகுதியில் விவசாயி ஒருவர் தனது வீட்டில் வைக்கோலை படப்புகளை அடுக்கி வைத்துள்ளார். இந்நிலையில் வைக்கோலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தென்காசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News