தக்கலை : மூன்று மாடி கட்டிடத்திலிருந்து உடைந்து விழுந்த கண்ணாடி

Update: 2023-12-11 03:55 GMT
கண்ணாடியை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டம் தக்கலை அருகே அழகியமண்டபம் சந்திப்பு பகுதியில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் பேக்கரி, ஹோட்டல், மெடிக்கல் ஸ்டோர் என பத்துக்கும்  மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வெளிப்புறத்தில் கண்ணாடி அமைக்கப்பட்டுள்ளது.  இன்று காலையில் அந்த கண்ணாடி திடீரென உடைந்து கீழே விழுந்தது. கீழே சாலையில் விழுந்து உடைந்து சிதறியும்,  அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  ஆனால் மேலும் இரண்டு கண்ணாடிகள் உடைந்து விழும் தருவாயில் இருந்தது. இதை பார்த்த போது மக்கள் தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.  தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பின்னர் அந்த பகுதியில் உள்ள மின் இணைப்பை துண்டித்து விட்டு, கீழே விழும் நிலையில் இருந்த கண்ணாடிகளை அப்புறப்படுத்தினார்கள்.
Tags:    

Similar News