போதையில் ரகளை செய்த பஸ் டிரைவர் கைது

போதையில் ரகளை செய்த பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-12-25 16:06 GMT
பைல் படம்

குமரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக குமரி மாவட்டத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மேரி மெரிபா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் வடசேரி பஸ் நிலையத்திற்குள் சென்றபோது அங்கு ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளை செய்து கொண்டிருப்பதை பார்த்தனர். அவரை பிடித்து போலீசார் கண்டித்த போது அவர் மது போதையில் இருப்பது தெரிய வந்தது. அவர் எச்சரிக்கையை மீறி செயல்பட்டதால் போலீசர் கைது செய்து, போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

விசாரணையில் அவரது பெயர் ஸ்ரீஜித் (27) என்பதும் புத்தேரி பெருமாள் நகரை சேர்ந்த அவர் மினி பஸ் டிரைவர் என்பதும் தெரிய வந்தது.

Tags:    

Similar News