லால்குடி அருகே வேலைக்குச் சென்ற கார் டிரைவர் மாயம்: தேடும் பணிகள் தீவிரம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரையில் வேலைக்குச் சென்ற கார் டிரைவர் திடீரென மாயமானார்.காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-02 09:00 GMT

கோப்பு படம் 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் 53 வயதான மோகன்.இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.மேலும் பயணிகளை ஏற்றிக் கொண்டு வெளி மாநிலங்களுக்கும் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பணிக்குச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து்அவரது மனைவி லால்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாயமான மோகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News