கட்டுபாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்த கார் - உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்

கேரளாவில் இருந்து ஆழியாரு வந்த சுற்றுலா வாகனம் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து பள்ளித்தில் கவிழ்ந்தது

Update: 2023-12-24 07:25 GMT

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்த கார்

பொள்ளாச்சி அடுத்த வால்பாறை,ஆழியார் அகிய இடங்கள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாகும்.சுற்றுலா தலமாக உள்ள இப்பகுதிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இன்று வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகளின் நான்கு சக்கர வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஆழியார் முதலாம் கொண்டை ஊசி வளைவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் அதிர்ஷ்டவசமாக அந்த வாகனத்தில் பயணித்த ஐந்து பேரும் உயிர் தப்பினர்.இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து அதிகாரிகள் பள்ளத்தில் விழுந்த வாகனத்தை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.
Tags:    

Similar News