சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு !!!

விருதுநகர் அருகே மதுரை-சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Update: 2024-03-01 09:44 GMT
 கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் செண்பகமூர்த்தி இவர் நியூ இந்தியா அசுரன்ஸ் என்ற இன்சூரன்ஸ் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய காரை மதுரையில் உள்ள ஒர்க் ஷாப்பில் சர்வீஸிற்காக விட்டதாக கூறப்படுகிறது அந்த காரை செண்பகமூர்த்தி தன்னுடன் பணிபுரியும் ரசூல் என்பவரை எடுத்து வர சொன்னதாகவும் அதனையடுத்து சாத்துரை சார்ந்த ரசூல் (30) கார் ஓட்டுநர் மதுரையிலிருந்து சாத்தூர் நோக்கி அந்த காரை ஓட்டிச் சென்றுவந்த பொழுது விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை அருகே உள்ள மேம்பாலத்தில் அந்த கார் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென எதிர்பாராதவிதமாக இன்ஜின் பகுதியில் இருந்து தீப்பற்றி உள்ளது இதை கண்ட வாகன ஓட்டுநர் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கியதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. தொடர்ந்து கார் பற்றி எறியத் துவங்கியதையடுத்து இது குறித்து விருதுநகர் தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் தீக்கிரையாகியது இந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News