தேர்தல் பொது பார்வையாளருடன் ஆட்சியர் ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு தொடர்பாக தேர்தல் பொது பார்வையாளருடன் ராணிப்பேட்டை ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

Update: 2024-06-01 10:03 GMT

தேர்தல் பொது பார்வையாளருடன் ஆட்சியர் ஆலோசனை

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் நாளான ஜூன் 4-ஆம் தேதி அன்று மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிப்பதற்காக தேர்தல் பொது பார்வையாளர் சுனில் குமார் (IAS) வருகை தந்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வளர்மதி நேரில் சென்று அவரை வரவேற்று வாக்கு எண்ணும் பணி முன்னேற்பாடு பணிகளை விசாரித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், நேர்முக உதவியாளர் விஜயராகவன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஞானவேல் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News