மாபெரும் உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்த கலெக்டர்

புதுக்கோட்டையில் மாபெரும் உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தினை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

Update: 2024-03-14 10:15 GMT

கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்த ஆட்சியர்

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்,

இளம் தலைமுறை வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், "தேர்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம்” என்ற மாபெரும் உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தினை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (14.03.2024) கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.

உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா, கல்லூரி முதல்வர் முனைவர் பா.புவனேஸ்வரி, வட்டாட்சியர் பரணி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ.சோனை கருப்பையா மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் உள்ளனர்.

Tags:    

Similar News