மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தமிழக மீனவர் விரோத போக்கை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமை தாங்கினார்.

Update: 2024-02-29 02:14 GMT
தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் தமிழக மீனவர் விரோத போக்கை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வடிவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் நரேந்திரன், கிருஷ்ணன், மோகன்குமார், ஜெய்சங்கர், மகளிர் அணி மாவட்ட தலைவர் காளியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகரத் தலைவர் வேடியப்பன் வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், அவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், இதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர்கள் ராஜேந்திரன், சந்திரசேகர், வேலன், காமராஜ், மணி, ஞானசேகர், பெரியசாமி, வெங்கடாசலம், வஜ்ஜிரம், பேரூராட்சி தலைவர்கள் தங்கராஜ், தக்காளி கணேசன், ஜெயபால், ராபர்ட், முருகன், அரூர் கணேசன், குமரவேல், மாணிக்கம், சிறுபான்மை அணி முபாரக், ஐ.என்.டி.யூ.சி.நிர்வாகிகள் சிவலிங்கம், சென்னகேசவன், தங்கவேல், வைரவன், டைலர் செல்வம், மனித உரிமை சதீஸ்குமார், எஸ்.சி.- எஸ்.டி. அணி ராமமூர்த்தி, நிர்வாகிகள் ஹரிகிருஷ்ணன், பழனி, மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News