மார்கெட் கட்டுமானப் பணியை விரைவில் முடிக்கணும் !

சிவகங்கையில் மார்க்கெட் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-12 10:21 GMT

சிவகங்கையில் மார்க்கெட் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கையில் புதன்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி உள்ளிட்ட பொருட்களை இங்கு விற்பனை செய்கின்றனர். இந்த சந்தை பகுதியில் கூரை இல்லாமல் இருந்தது. வாரச்சந்தைக்குள் புதிதாக கடைகள் கட்டவும் கூரை அமைக்கவும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 3.89 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.

சந்தை கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் வியாபாரிகள் சாலைகளில் கடைகள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். எனவே சந்தை கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News