நெல்லையில் கவுன்சிலர் குப்பைகளை தூர்வாரினார்.

நெல்லையில் கவுன்சிலர் குப்பைகளை தூர்வாரினார்.

Update: 2024-01-23 16:00 GMT

குப்பைகளை வாரும் கவுன்சிலர்

நெல்லை மாநகராட்சி 25வது வார்டு சுடலைமாடன் கோவில் தெரு,தெப்பக்குளம் தெரு,நயினார் குளம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடப்பதாக மாமன்ற உறுப்பினர் கிட்டுவிடும் வார்டு மக்கள் நேற்று புகார் தெரிவித்தனர்.

புகாரை தொடர்ந்து இன்று 23/01/24 காலை கவுன்சிலர் கிட்டு தானே களத்தில் இறங்கி தூய்மை பணியை மேற்கொண்டார்.இந்த பணியை மேற்கொண்ட கவுன்சிலருக்கு வார்டு மக்கள் நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்தனர்

Tags:    

Similar News