நாளை மறுநாள் சொர்க்கவாசல் திறப்பு

ஆண்டுதோறும் மார்கழி மாதம் சொர்க்க வாசல் திறப்பு வெகுவிமர்சையாக நடைபெறும்

Update: 2023-12-21 08:10 GMT

மார்கழி சொர்க வாசல் திறப்பு

பழநி பெருமாள் கோயில்களில் நாளை மறுநாள் சொர்க்கவாசல் திறப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பழநி நகரின் மேற்கு ரதவீதியில் லக்குமி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இதுபோல் பழநி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில்கள் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இக்கோயில்களில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு இந்நிகழ்ச்சி நாளை மறுநாள் (டிச.23ம் தேதி, சனிக்கிழமை) நடைபெறுகிறது.
Tags:    

Similar News