முள் படுக்கையில் படுத்து பக்தர் வினோத வழிபாடு

விருதுநகர் அருகே முள் படுக்கையில் படுத்து பக்தர் வினோத வழிபாடு செய்தனர்.

Update: 2024-06-15 06:53 GMT

விநோத வழிபாடு 

 விருதுநகர் அருகே வரலொட்டி கிராமத்தில் அமைந்துள்ள சோணை முத்தையா - கலுவடையான் கோவிலில் வைகாசி பொங்கல் விழா மற்றும் களரி விழா நடைபெற்று வருகிறது. சாமி ஆட்டத்துடன் பெட்டி ஊர்வலம் நடந்தது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக காரியாபட்டியை சேர்ந்த ராமர் என்ற பக்தர் சாமி ஆட்டத்துடன் வந்து முள் படுக்கையில் தலை குப்புற கவிழ்ந்து படுத்து சிறிது நேரம் காத்திருந்து வினோதமாக பக்தியுடன் வழிபாடு செய்தார். பக்தரின் இந்த வினோத வழிபாட்டினை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வழிபட்டனர்.

Tags:    

Similar News