வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆட்சித்தலைவர் ஜெயசீலன பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-11-18 08:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முதலமைச்சரின் சாலைமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் வெம்பக்கோட்டை முதல் விஜயகரிசல்குளம் அகழ்வாராச்சி நடைபெறும் இடம்

வரை சாலை அமைக்கும் பணிகளையும், வெம்பக்கோட்டை இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் 352 வீடுகள் ரூ.18.94 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருவதையும், அதனை தொடர்ந்து, துலுக்கன்பட்டி கிராமத்தில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் அரசு மானியமாக ஒரு பயனாளிக்கு ரூ.2.70 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீட்டினையும் பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News