மக்களுடன்முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சி மற்றும் பல்லடம் நகராட்சி ஆகிய பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-01-02 15:13 GMT

முகாமை ஆய்வு செய்த ஆட்சியர்

திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டி நகராட்சி மற்றும் பல்லடம் நகராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டார்.

திருமுருகன் பூண்டி நகராட்சியில் வார்டு எண் 3,4,5,6,7,8,9 1,22 மற்றும் 23 ஆகிய வார்டுகளுக்கு, அவிநாசி வட்டம் திருமுருகன் பூண்டி நகராட்சி மாணிக்கவாசகர் அரங்கத்திலும், பல்லடம் நகராட்சி வார்டு எண் 13,14,15 ,16,17 மற்றும் 18 ஆகிய வார்டுகளுக்கு பல்லடம் நகராட்சி பி எம் ஆர் சுப்புலட்சுமி திருமண மண்டபம்,காங்கேயம் வட்டம் முத்தூர் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும்,

முத்தூர் கொடுமுடி சாலை கனகதாரா திருமண மண்டபத்திலும் தொங்குட்டி பாளையம் ஊராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தொங்குட்டி பாளையம் விவேகானந்தர் டியூஷன் சென்றிலும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முகாம்கள் நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் முதல்வர் திட்டத்தின் கீழ் இதுவரை நடைபெற்ற 57 முகாம்களில் 26,278 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

Tags:    

Similar News