சிவகாசியில் தேர்தல் பயிற்சி வகுப்பினை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

சிவகாசியில் தேர்தல் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2024-03-24 15:00 GMT
சிவகாசியில் தேர்தல் பயிற்சி வகுப்பினை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்...

விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலுள்ள இந்து நாடார் விக்டோரியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாடு தொடர்பாக நடைபெற்ற முதல் பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாசியர் விஸ்வநாதன் மற்றும் வட்டாசியர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News