உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர்

மதுரையில் உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் மாவட்ட ஆட்சியர்.;

Update: 2023-12-13 10:22 GMT

மதுரையில் உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் மாவட்ட ஆட்சியர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உடல் உறுப்பு தானம் செய்த ஜெயந்தி உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

உடல் உறுப்புதானம் செய்த மதுரை தெப்பக்குளம், காமராஜன் தெருவை சேர்ந்த திருமதி.சே.ஜெயந்தி (வயது 54) என்பவரது உடலுக்கு இன்று (13.12.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா அன்னாரது வீட்டிற்கு நேரில் சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தி, அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மதுரை தெப்பக்குளம், காமராஜன் தெருவை சேர்ந்த திருமதி.சே.ஜெயந்தி என்பவர் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisement

12.12.2023.அன்று மாலை சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்தார். இதனையடுத்து உடல் உறுப்பு தானம் செய்ய அன்னாரது குடும்பத்தினர் முன் வந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் உடல் உறுப்புதானம் செய்பவர்களுக்கு அவர்களுடைய தியாகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று அண்மையில் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், உறுப்பு தானம் செய்த திருமதி.சே.ஜெயந்தி அவர்களின் உடலுக்கு இன்று மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தெப்பக்குளம் காமராஜன் தெருவில் உள்ள அன்னாரது வீட்டிற்கு நேரடியாக சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Tags:    

Similar News