விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி உசிலம்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் வேண்டுதல்

விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி உசிலம்பட்டி திருமுருகன் கோவில் பால் அபிஷேகம் செய்து தேமுதிக நிர்வாகிகள் வேண்டுதல் நடத்தினர்.

Update: 2023-11-30 11:24 GMT

தேமுதிகவினர் வேண்டுதல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சுவாச நுரையீரல் காரணமாக சிகிச்சைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டியும் மீண்டும் கம்பீரத்துடன் செயலாற்ற வேண்டியும் தேமுதிக மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் திருமுருகன் கோவிலில் பால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வேண்டுதல் செய்தனர்.

மாவட்ட பொருளாளர் -வழகறிஞர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கரிமாத்தூர்பாண்டி, எம்எஸ்மாணிக்கம், வில்லாணி செல்வம், உசிலமலபட்டி ஒன்றிய செயலாளர் சமுத்திரபாண்டி, சேடபட்டி ஒனலறிய செயலாளர் மகாலிங்கம், செல்லம்பட்டி ஒன்றிய. செயலாளர் சிவபிரகாஷ், உசிலம்பட்டி நகரச்செயலாளர் அசோகன், எழுமலை பேரூர் கழகச் செயலாளர் சேகர், முனியாண்டி,தங்கப்பாண்டி, ராமசாமி,ஆண்டிச்சாமி, முத்துகருப்பன், மூக்கன்,மொக்சாமி,ராமர், அழகுராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.,

Tags:    

Similar News