வீட்டின் கதவை உடைத்து ரூ.8 லட்சம் நகை, பணம் கொள்ளை

கோவை வடவள்ளியில் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2023-12-31 10:21 GMT

பைல் படம் 

கோவை:வடவள்ளி அபிராமி நகர் பகுதியை சேர்ந்தவர் வித்யாதர்.பேருந்து உரிமையாளரான இவர் விவசாயமும் செய்து வரும் நிலையில் கடந்த 27ம் தேதி வீட்டை பூட்டி விட்டு தாளவாடியில் உள்ள தோட்ட்த்திற்கு சென்றுள்ளார்.29ம் தேதி இவரது வீட்டின் அருகில் வசித்து வரும் மருத்துவர் ராமசாமி வித்யாதரை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கபட்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தாளவாடியில் இருந்து கோவை திரும்பியவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைக்கபட்டிருந்த வைர செயின்,கம்மல்மோதிரம்,ஐந்து தங்க வளையல்கள்,ஒரு செயின்,சிசிடிவி-ஹார்ட் டிஸ்க்,கடவு சீட்டு மற்றும் பணம் ஐந்து லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் ஆகியவை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து வித்யாதர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வடவள்ளி போலீசார் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குடியிருப்பு நிறைந்த பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News