போலார் இயந்திரத்தில் டிரைவரின் கை சிக்கி விபத்து

ஆத்துார் அருகே போலார் இயந்திரத்தில் டிரைவரின் கை சிக்கி விபத்து ஏற்பட்டது.

Update: 2024-02-17 04:50 GMT

ஆத்துார் அருகே விபத்து 

கெங்கவல்லி:ஆத்துார் அருகே பழனியாபுரி, சுந்தரபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் செங்கதிர்,20. டிரைவரான இவர் நேற்று மதியம், 1:00மணிக்கு அப்பமசமுத்திரத்தில் நெல் அறுவடை செய்த வயலில் வைக்கோல் கட்டும்,பேலர்' இயந்திரத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது வைக்கோல் சிக்கிக்கொள்ள, சரிசெய்ய முயன்றார். ஆனால், பேலர்' இயந்திரத்தில்அவரது இடது கை சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட தொழிலாளர்கள், ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News