வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கும் புழுதி மண்

Update: 2023-11-10 11:44 GMT

புழுதி பறக்கும் சாலை


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் கரூர்ரோடு குளத்துார் பகுதியில் ரோடு பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. துமை வேகத்தில் நடக்கும் இப்பணிகளால் ரோட்டோரத்தில் உள்ள புழுதி மண்கள் வாகன ஓட்டிகள் கண்களை பதம் பார்க்கிறது. இதுமட்டுமின்றி முன்பு செல்லும் வாகனங்களே தெரியாத அளவிற்கு புழுதி காற்றில் பறப்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதே நிலை தொடர்வதால் சிலர் இவ்வழியில் செல்வதை தவிர்த்து வேறு பாதையில் சுற்றி செல்கின்றனர். தொடரும் இப்பிரச்னைக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைத்து ரோடு பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
Tags:    

Similar News