உயிருக்கு போராடிய ஆந்தையை மீட்ட தீயணைப்பு துறையினர்

ஆத்தூர் அருகே பள்ளி வளாக செப்டிக் டேங்க் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடிய ஆந்தையை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Update: 2024-02-28 08:40 GMT

மீட்கப்பட்ட ஆந்தை 

சேலம் மாவட்டம்,ஆத்தூர் அருகே மஞ்சனியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் செப்டிக் டேங்க்தொட்டியில் ஏதோ சத்தம் கேட்பதை அறிந்த மாணவர்கள் சென்று பார்க்கும் போது பெரிய ஆந்தை ஒன்று அடிபட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை அறிந்த பகுதி மாணவர்கள் பெற்றோரிடம்  தெரிவித்தனர். உடனே ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆந்தையை அரை மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டு ஆத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்டு உயிருடன் ஆந்தை மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Tags:    

Similar News