அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை 8-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை 8-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2024-07-02 07:17 GMT

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை 8-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அதா வது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோக நாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இது வரை 33 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 26 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சி யம் அளித்துள்ளனர். தொடர்ந்து, மற்ற சாட்சிகளின் விசாரணைக்காக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது சதானந்தன், கோபி நாத், ஜெயச்சந்திரன், கோதகுமார் ஆகிய 4 பேர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக் கீல்கள் மனுதாக்கல் செய்தனர். நேற்று அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. தொடர்ந்து, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) இளவரசன், இதன் விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News