கணவன் கண்முன்னே மனைவி பலியான சம்பவம் !

கணவன் கண்முன்னே மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-13 06:14 GMT

பலி

செங்கல்பட்டு மாவட்டம்,முடிச்சூர் பிரதான சாலை மதனபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் கணவன் மனைவி ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் பழைய பெருங்களத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி திடிரென மோதியதில் சம்பவ இடத்திலேயே கணவன் மனைவி தடுமாறி கீழே விழுந்தனர். அப்பொழுது பின்னால் அமர்ந்த இருந்து மனைவி விஜயா லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார். கணவன் கண்முன்னே மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அருகே உள்ள டோல்கேட்டில் கட்டணம் செலுத்துவதற்கு பயந்து கொண்டு முடிச்சூர் சாலையில் அதிகளவில் லாரிகள் வருவதாக குற்றச்சாட்டு இருந்துள்ளது.
Tags:    

Similar News