வீட்டைத் தரமட்டமாக்கிய விவகாரம்: பெண் கைது!

ஜவ்வாது மலை வழுதலம்பட்டு கிராமத்தில் குண்டர்களை வைத்து வீட்டைத் இடித்து தரமட்டமாக்கிய விவகாரத்தில் பெண் உள்பட17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-05-02 01:25 GMT

ஜவ்வாது மலை வழுதலம்பட்டு கிராமத்தில் குண்டர்களை வைத்து வீட்டைத் இடித்து தரமட்டமாக்கிய விவகாரத்தில் பெண் உள்பட17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை வழுதலம்பட்டு கிராமத்தில் குண்டர்களை வைத்து வீட்டைத் இடித்து தரமட்டமாக்கிய விவகாரத்தில் பெண் கைது!17 பேர் மீது வழக்குப்பதிவு திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு வழுதலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜி மனைவி காளியம்மன் என்பவருடைய வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய மனைவி ராமக்காள் என்பவர் சுமார் 40 பேர் கொண்ட குண்டர்களை வரவழைத்து ராஜகாளியம்மன் அவர்களின் வீட்டை சுத்தியால் அடித்து தரைமட்டம் ஆக்கி உள்ளனர். அதனை அப்பகுதியில் சேர்ந்த சிலர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளனர். இதன் காரணமாக திருப்பத்தூர் கிராமிய போலீசார் சம்பந்தப்பட்டவர்களை காவல் நிலைய விசாரணை மேற்கொண்டனர். அப்போது அடியட்களை வரவழைத்து பிரச்சனையில் ஈடுபட்ட ராமக்காள் என்பவரை திருப்பத்தூர் கிராமிய போலீசார் கைது செய்தனர் மேலும் சுற்றுச்சவரை இடித்த 17 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தலைமறைவாக உள்ள குண்டர்களை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News