அம்பையில் கையால் தாக்கி மிரட்டியவர் அதிரடி கைது
அம்பாசமுத்திரம் அருகே தகராறு செய்து கையால் தாக்கி மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-06 07:01 GMT
கைது
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (28). இவரிடம் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் (21) என்பவர் தகராறு செய்து பைக்கை கீழே தள்ளி கையால் தாக்கி மிரட்டியுள்ளார். இது குறித்து பொன்னுசாமி அளித்த புகாரின் படி அம்பை சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி மணிகண்டனை நேற்று (மார்ச் 5) கைது செய்தார்.