வேளாண்மை விரிவாக்க கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர்

Update: 2023-12-20 11:01 GMT

கட்டிட திறப்பு 

வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றியும் தொடங்கி வைத்த  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விவசாயிகளுக்கு விவசாய இயந்திரங்களை வழங்கினார்.

புதுக்கோட்டை அருகே உள்ள காரையூர் கிராமத்தில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் தமிழ்நாடு மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி பங்கேற்றார். இதை எடுத்து விவசாயிகளுக்கு பொருள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு வேளாண்மை துறையின் புதுக்கோட்டை மாவட்ட இணை இயக்குனர் பெரியசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாய துறையை சேர்ந்த அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள், அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News