போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த அமைச்சர்

திருவள்ளூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி தொடங்கி வைத்தார்.

Update: 2024-03-03 03:09 GMT

போலியோ சொட்டு மருந்து முகாம் 

தமிழகம் முழுவதும்  43 ஆயிரத்து 51 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் இரா.கி.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேருந்து நிலையத்தில் இன்று காலை 8 மணி அளவில் கைத்தறி துணி நூல் துறை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ஆர்.காந்தி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளித்து முகாமினை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சந்திரன் கலந்துகொண்டார். இந்த முகாமானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள்,அங்கன்வாடி மையங்கள்,பள்ளிகள், மற்றும் ரயில் நிலையம், பேருந்து நிலையம், சுங்கச்சாவடி ஆகிய பொது இடங்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News