கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்;
By : King 24x7 Website
Update: 2023-12-15 04:07 GMT
கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி பகுதியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் மூலம் ரூபாய் 614 இலட்சம் மதிப்பீட்டில் 1500 மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணியை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ம. இராஜசேகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/திட்ட இயக்குநர் ரா. சரண்யா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.