வேப்ப மரத்தில் பால் வடியும் அதிசயம்

புளியங்குடி அருகே வேப்ப மரத்தில் பால் வடியும் அதிசயம். அப்பகுதி மக்கள் மரத்திற்கு பால். மஞ்சள். மல்லிகை பூ வைத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Update: 2024-02-20 06:42 GMT
 வேப்ப மரத்தில் பால் வடியும் அதிசயம்
தென்காசி மாவட்டம் புளியங்குடி - சங்கரன்கோவில் செல்லும் சாலையில் உள்ள முள்ளிக்குளம் கிராமத்தில் கடந்த 4 நாட்களாக வேப்ப மரத்தில் பால் வடிந்து வருகிறது. இதனால் ஊரின் “பங்களா” அருகில் சாலையோரத்தில் உள்ள வேப்ப மரத்தில் தொடர்ந்து சொட்டு சொட்டாக பால் வடிந்துகொண்டு இருக்கிறது. இந்த அதிசய நிகழ்வை காண சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இந்த பால் வடியும் வேப்ப மரத்திற்கு பால். மஞ்சள். மல்லிகை பூ வைத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News