கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக பலி

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-03-10 07:57 GMT

முதியவர் பலி

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள தெற்கு இலந்தைகுளம் மானங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி மகன் மாடசாமி (70) விவசாயி. இவர் இன்று காலை அங்குள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் இருந்த கயத்தாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கழுகுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News