ஆடுமாடுகளை கடித்த நாயின் உரிமையாளருக்கு அடி உதை கொலைமிரட்டல்

மயிலாடுதுறை அருகே ஆடு மாடுகளை கடித்த நாயின் உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-04-29 02:20 GMT

காவல் நிலையம் 

மயிலாடுதுறை அறிக்கை அருவாபடி நீளத்தெருவை சேர்ந்தவர் லோகநாதன் மகன் அபிஷேக் 24. இதே தெருவில் கலியபெருமாள் மகன் ரங்கநாதன் என்பவர் ஆடு மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார் அபிஷேக் வீட்டில் உள்ள நாய் அடிக்கடி ரங்கநாதன் வீட்டு ஆடு மாடுகளை துரத்துவதும் கடிப்பதும் வாடிக்கையாக இருந்தது, இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

சம்பவ தினத்தன்று ரங்கநாதன் நேரடியாக அபிஷேக் வீட்டிற்கு சென்று நாயை கட்டி போட்டு வளர்க்க மாட்டியா என் வீட்டு ஆடுமாடுகளை கடிப்பது தான் அதுக்கு வேலையா என்று கேட்டு திட்டியுள்ளார். இது எதிர்த்து கேட்ட அபிஷேக்கை அடித்தும் இனிமேல் உன்னோட நாய் எனதுஆடு மாடுளை கடித்தால் உன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டி விட்டு சென்று விட்டார். இதுகுறித்து அபிஷேக் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் ரங்கநாதன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News