பாலத்தில் இருந்து விழுந்த ஊராட்சி பணியாளர் பலி!
பொன்னமராவதி அருகே பாலத்தில் இருந்து விழுந்த ஊராட்சி பணியாளர் பலி.;
Update: 2024-03-08 07:16 GMT
உயிரிழப்பு
புதுகோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மேலத்தானியம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டராக வேலைபார்த்து வந்தவர் முருகேசன்(45). இவர் சம்பவத்தன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றிவிட்டு, அருகில் உள்ள அய்யனார்புரம் பாலத்தில் படுத்து துாங்கினார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்த அவர் அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.